Saturday 25 February 2012

பசு வழிபாடு 




முன்னும் பின்னும் முக அமைப்பு உள்ள பசு கன்று போடும் போது அதன் அமைப்பு முன்பின் முகம் கொண்டதாக இருக்கும் அந்த நிலமைலுள்ள பசுவை வலம் வந்து கும்பிட்டால் திருமண தடை அகன்று விடும் .நந்த சபதமிஅன்று பசுவை பூஜை செய்து வணகினால் சகல  தேவைதைகளின் அருள் கிடைக்கும்.
குடும்பம்   சிறக்க வீட்டு  நிலை  பூஜை
 



மாதம் ஒரு  முறை  வெள்ளிகிழமை  அல்லது  சித்திரை   மாதம்  10 தேதி  , வைகாசி  மாதம்  21 தேதி , ஆடி மாதம் 6 ,  ஐபசி  மாதம் 11, கார்த்திகை  மாதம் 8 , தை  மாதம் 12 , மாசி  மாதம் 22 இந்த  நாளில்  பிரமமுகுர்த்தம் நேரத்தில்  விடியற்காலை  மணி  3 இருந்து  5 குள்  நிலை பூஜை செய்ய அஷ்டலக்ஷ்மி தங்கி  வசம்  புரிவாள் .






 

Thursday 23 February 2012

பௌர்ணமியின் சிறப்பு: 
 
பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும்.
அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.'
தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.
மேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம்.


அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது. 


மேலும் பௌர்ணமி திதி என்பது வளர்பிறை திதி ஆகும் அதன் பின் வரும் பிரதமை திதி முதல் அம்மாவசை வரை தான் தேய்பிறை திதி ஆகும் .

Wednesday 22 February 2012

சூரியனின் 12   திருப்பெயர்கள்
 


  1. சூரியன்
  2. ரவி
  3. பாஸ்கரன்
  4. ஆதித்யன்
  5. அருணண்
  6. கர்ப்பன்
  7. மருட்சயன்
  8. அர்க்கன்
  9. சரித்திரன்
  10. மித்ரன்
  11. சிவன்
  12. பூசன்

ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?



1. அக்கரவிலக் கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரு ம்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்ககுழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போந   பொருளைக் கண்டுபிடிததல் அல்லது நாட்டியம் பழகுவித்தல )
49. மூட்டி (கைக்குள் மூடியிருக் கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்க் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பை சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள மூழ்கி வெகு நேரமிருத்த ல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருததல்)
58. வாயுஸ்தம்ப ம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடககல்)
62. கன்னத்தம்ப ம்
63. கட்கத்தம்ப ம்
64. அவத்தைப் பிரயோகம் 








Monday 20 February 2012

மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

 

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே



நினைத்த காரியம் நிறைவேற

சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:
கோவிந்தோ ராஜராஜேரா பஹு புஷ்பார்ச்ச நப்ரிய
:


இந்த ஸ்லோகத்தை தினமும் இரவில் உறங்குவதற்கு முன் பதினோரு தடவை பாராயணம் செய்து வர நினைத்த காரியம் எதுவாகினும் நிறைவேறும்.
சர்ப்ப தோஷம் நீங்க
 
நர்ம தாயை நம: ப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத !
கெட்ட கனவுகள் வராமலிருக்க
 
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே.

 
இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கவும்.
நீண்ட ஆயுள் உடன் வாழ

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
 
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ  மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!



சுகப்பிரசவம் சாத்தியமாக
 
ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத
ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப-தோஷஹா புத்ரபௌத்ரத:


இதைப் பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.
நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக
 
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:


இதைக் கூறிவர  குழந்தைப் பேறு உண்டாகும்.



செய்யும் காரியங்களில் தடைகள் விலக
 
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

Sunday 19 February 2012

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க
 
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக:
அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத:
அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்
அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய:



இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள:
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய:
காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:


இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

நோய்கள் நீங்க
 
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

 
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
கணவன்  மனைவி ஒற்றுமையுடனிருக்க

விளக்கு எண்ணெய் தீபத்தில் இரண்டு திரி போட்டு 41  நாட்கள் வணங்கி வர பிள்ளையர்க்கு பால் அபிசேகம் செய்து அர்ச்சனை செய்ய மனஸ்தாபம் சண்டைகள் இருக்காது .    

Saturday 18 February 2012

பகை தோஷம் நீங்க

     வலது  மணிகட்டில்   7 நிறம்  கொண்ட  தனிதனி  கயிறு     கட்டிகொண்டல்    அவர்  யாரிடத்தும்  பகை கொல்லாமல்  வாழலாம் .இதைற்கு    எந்த  மந்திரவதிஎடம்  செல்லவேண்டியதில்லை . நீங்கள்ளே  கடைக்கு  சென்று  வாங்கி  அணிந்துகொள்ளலாம் .

Friday 17 February 2012

செய்வினை  தோஷம் நீங்க

 நவகிரக வழிபாடு


           ஒரு சனிக்கிழமை உங்கள் பகுதயில்அமைந்து  உள்ள  சிவன் கோயிலுக்கு சென்று அங்கு   உள்ள  நவகிரக தெய்வத்துக்கு        தேங்காய்  -9,                      நாட்டுவாழைபழம்-18,கொட்டைபாக்கு -18, வெற்றிலை -18,   கதம்பம்  பூ  - ஒரு முழம்                       என    வைத்து வழிபட்டு  வந்தால் 
செய்வினை நீங்கும் .  
      
கடன்  தோஷம்  நீங்க




பரிகாரம் -1 

         சென்ற     பிறவில்  செய்த  தவறுகளால்  இந்த  பிறவியில்  ஏற்பட்ட   கடன் தொல்லை  இருந்து  மீள  3 பௌர்ணமி  நாளில்  தங்கள்  குலதெய்வம்    வழிப்பாடு  செய்து வந்தால்  கடன் தொலை படிபடியாக  குறையும் ,கடனனை  அடைக்கலாம். 

   
பரிகாரம் - 2 

         குலதெய்வம் அருகில்  இல்லாமல்  தொலைவில்  வசிபவர்கள்  அவர்கள்  வீட்டில்  குலதெய்வம் போட்டோ  வைத்து  or         குலதெய்வம் உள்ள  ஊர்  திசை  பார்த்து  5 முக  நெய்விளக்கு  ஏற்றி   9 பௌர்ணமி  நாளில் தொடர்ச்சியாக   வழிப்பாட்டு  வந்தால் கடன் சுமை  குறையும். 90 நாளில் கடனை  அடைத்துவிடலாம் . உங்களுக்கு  வரவண்டிய  பாக்கி  இருந்தாலும்    வசூல் ஆகிவிடும்   .

Thursday 16 February 2012

வியாபாரம்  பெருக எளிய பரிகாரம் 



நவதானியங்களை  ஒரு மஞ்சள் துணியில் முடித்து உங்கள் கடை வாசலில் கட்டுங்கள். உங்கள் கல்லாவில் போட்டு வையுங்கள் .நஷ்டம் இல்லாத அளவில் உங்கள் வியாபாரம் பெருகும் .    
ஆன்மீகத் துளிகள்
 
பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க 

   ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் கிரகம் இல்லை எனில் அது அவ யோகம் என்பது ஆகும் .அவர்கள் கிருஸ்ண பகவான் கோயில் சென்று அவல் பொறி பாயசம் செய்து சாமிக்கு நிவேதனம் செய்து பசுவுக்கு கொடுத்து மற்ற அனைவர்க்கும் கொடுக்க வேண்டும்.அல்லது வீட்டில்   கிருஸ்ண பகவான் போடோவிற்கு இது போல் செய்தல் இந்த தோஷம் நீங்க பெறும்.       
அக்னிஹோத்ரம்


bhopal விஷ வாயு கேள்விபட்டிருபீர்கள்
லக்ஷம் மக்கள் இறந்தார்கள்
ஆனால் ஒரு குடும்பம் பிழைத்தது அவர்கள் வீட்டில்
அக்னி ஹோத்ரம் வளர்த்தார்கள்   அகவே அவர்கள் குடும்பம் பிழைத்தது


    அக்னிஹோத்ரம்  நாம் தினமும் காலையில்,மாலையில் செய்து வந்தால் நம் குடும்பத்திற்கு   நன்மை மட்டுமே நடக்கும் என்பது சாஸ்திரம் .இது அனைவரும் செய்யலாம் ஆனால் குழந்தைகள் செய்ய கூடாது வயதுவந்தவர்கள் மற்றும் பெரியவர்கள்  தான் செய்யவேண்டும் . 

அக்னிஹோத்ரம்செய்ய தேவையான பொருட்கள்

1) சிறிய ஹோம குண்டம்,

ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம் கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண் பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம். தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய சதுரமாக குழி தோண்டி அதில் சாணம் கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.

2) சாண வறட்டி
சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.

3) முனை உடையாத பச்சரிசி.

இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.

4) பசு நெய்

சிறிது அளவு போதுமானது. அதிகமான பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.

இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு தான்.

அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :

சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.

அக்னிஹோத்ரம் செய் முறை :

ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.

பின் சாண வறட்டியை இரண்டு மூன்று துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு, வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.

நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும். அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில் சேர்க்கவும்.

இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால் போதுமானது.

அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை நிறைவு செய்யவும்..


அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :

சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா

சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்

அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா

ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா


ஆன்மீகத் துளிகள்

புத்தாடை போட  பொருத்தமான நட்சத்திரங்கள்


 வ.எண் நட்சத்திரம் பலன் விபரம்
 1 அசுவணிஅசுவணியில் புது ஆடை அணிபவருக்கு மேலும் மேலும் உடைகள் கிடைக்கும்.
 2 பரணிபரணி களவு கொடுக்க வேண்டி நேரிடும்.
 3 கார்த்திகைஅவ்வுடை தீப்பிடிக்கும்.
 4 ரோகிணிரோகிணி அதிக பொருள் சேரும். 
 5 மிருகசீரிடம்மிருகசீரிடம் எலிகளுக்கு இரை ஆகும்.
 6 திருவாதிரைதிருவாதிரை பொருள் நஸ்டம். 
 7 புனர்பூசம்புனர்பூசம் எவ்வித தொலையும் ஏற்படாது.
 8 பூசம்பூசம் பணம் லாபம் உண்டு
 9 ஆயில்யம்ஆயில்யம் விரைவில் அது இற்றுப் போகும்.
 10 மகம்மகம் உயிருக்கு ஆபத்து வரும்.
 11 பூரம்பூரம் அரசநீதியினால் இடையூறு ஏற்படும் நாள்.
 12 உத்திரம்உத்திரம் மிகநல்ல நாள் ஆதாயம் பெருகும் ஆரோக்யம் உண்டு.
 13 அஸ்தம்அஸ்தம் எடுத்துக்கொண்ட காரியம் நிறைவேறும். 
 14 சித்திரைசித்திரை மேலும் மேலும் உடைகள் கிடைக்கும்.
 15 சுவாதிசுவாதி  இனிய உணவு குடி வகைகளும் கிடைக்கும்.
 16 விசாகம்விசாகம் புகழ் ஓங்கும்.
 17 அனுசம்அனுசம் நல்ல நண்பர்கள் கிடைத்து உயர் மதிப்பும் உண்டாகும்.
 18 கேட்டைகேட்டை இடையூறு உண்டாகும்.
 19 மூலம்மூலம் வண்ணான் மூலமாய்நீரில் அடித்துச் செல்லப்படும்.
 20 பூராடம்பூராடம் ஆரோக்கியத்திற்கு இடையூறு உண்டாகும்.
 21 உத்திராடம்உத்திராடம் விருந்து உபசாரத்தில் கல்ந்து கொள்ள நேரிடும்.
 22 திருவோணம்திருவோணம் கண்நோய் ஏற்படும். 
 23 அவிட்டம்அவிட்டம் வயள் விளைச்சல் பெருகும். 
 24 சதயம்சதயம் விஸத்தினால் ஆபத்து.
 25 பூரட்டாதிபூரட்டாதி நிரினால் ஆபத்து.
 26 உத்திரட்டாதிஉத்திரட்டாதி குழந்தை பாக்கியம் கிடைக்கும் குழண்ட்கை பேரு இல்லாதவர்கள் இந்த நட்சத்திரத்தில் ஆடை அணிந்தால் நன்மை உண்டு.
 27 ரேவதிரேவதி நட்சத்திரட்ம் தனவந்தராகலாம் இரத்தினக்கல் வாங்குவத்ற்கான அதிர்ஸ்டம் உண்டாகும்.


குறிப்பு : அவரவர்களின் பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் பண்டிகையில் வரும் நட்சத்திரங்கள் விதிவிலக்கு.
 

ஆன்மீகத் துளிகள்
பசு தானம்
 

தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது. 3-லிருந்து 5-க்குள் அமைந்தால் மனத் திருப்தியையும், 1ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன.

பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது. பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம். கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தணர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தர வேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும். பட்டுத்துணி அதன்மீது அணிவித்து, அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும், அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும். 
ஆலயங்களுக்கு பசு தானம் செய்தல்
ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும். பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள். பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.

கோ தான பலன்கள்

இந்திரன் இருக்குமிடம் இந்திரலோகம் என்றும், பித்ருக்கள் இருக்குமிடம் பித்ருக்கள் லோகம் என்றும், விஷ்ணு பகவான் இருக்குமிடம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதுபோல் கிருஷ்ண பகவான் இருக்குமிடம் கோ லோகம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது. பசு தானத்தால் ஒருவர் தனது முன் ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானத்தின் வகைகள்


கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காக Ôஉக்ராந்தி கோ தானம்Õ என்று செய்வதுண்டு. ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு Ôவைதரணி கோ தானம்Õ என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து, தேவாரம், திருவாசகம் ஓதி, சிவபுராணம் படிக்கக் கேட்டு, பசுவை தானம் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் தானம் செய்பவர் உயர்ந்த கதி அடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதம் தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை அடைவார். ஒருவர் இறக்கும் தருவாயில் கோ தானம் செய்வதால் எம பயம் விலகுகிறது. 

பசுவை தானம் செய்ய இயலாதவர்கள் ஆலயங்களில் உள்ள பசுவை அதன் உயிர் உள்ளவரை, அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரிப்பது பசு தானம் செய்வதை விட உயர்ந்த பலனைக் கொடுக்கும். பசுவை தானம் செய்வதாக இருந்தால் ஆரோக்கியமான பசுவை தானம் செய்ய வேண்டும். பராமரிப்பதாக இருந்தால் ஆரோக்கியம் இல்லாத நோய் உள்ள பசுவானாலும் பராமரிக்கலாம். பால் வற்றிய பசுவை பராமரிக்க பொருள் உதவி செய்பவர்கள் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

நகரங்களில்  வசிபவர்கள்    பசு   கன்றுடன் கூடிய போட்டோ வைத்து கோமாதா பூஜை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
ஆன்மீகத் துளிகள்

ராசிக்கு தகுந்த வழிபாடு தெய்வம்  


    மேஷ ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனையும்,

   ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும்,

   மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும்,

   கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும்,

   சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,

   கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,

    துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,

   விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,

    தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,

    மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,

    கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,

    மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.

 
விரதத்தினால்  அடையும்    பலன்கள் 

  • அம்மாவசை  விரதம் , பிதுர்  திருப்தி  வம்ச  விருத்தி 
  • பௌர்ணமி  செல்வம்  பெருகும் 
  • கிருத்திகை  முருகன்  அருள்  கிட்டும் .
  • பிரதோஷம்  அபிலாசை  பூர்த்தியாகும்    
  • ஏகாதசி  மனசாந்தி  பெறலாம் 
  • சஷ்டி  சந்ததி  நன்மை 
  • சதுர்த்தி  விநாயகர்  அருள் பெறலாம்
  • சிவராத்திரி  பாவ  நிவர்த்தி  பிறவி  விடுதலை 
  • கந்தசஷ்டி  பிணி  நிவர்த்தி அபிலாசை பூர்த்தி 
  • விஜயதசமி  வெற்றி  தரும்  நாள் 
  • வரலக்ஷ்மி  நோன்பு  மாங்கலிய  தீர்க்கம்  சந்தான  விருத்தி
  • கௌரி    மாங்கலிய தீர்க்கம் யோகம்  உண்டு  
  • வசந்த  பஞ்சமி  யோகசாதனை  வெற்றி பெறலாம்
  • ஸ்ரீ  பஞ்சமி லக்ஷ்மி  கடாஷம்  பெறலாம்
  • ஆனிநிர்சலி    ஏகாதசி எல்லா  நன்மை தரும் .
  • திருவாதிரை சிவபெருமான் அருள் கிட்டும்
  
வாழ்க்கை அமைதியாக இருக்க

     வில்வ இலை , மகிழம் பூ ,செம்பருத்தி பூ  மூன்றையும்  சேர்த்து நன்றாக காயவைத்து பொடி செய்து அதை சம்பராணி போடும் போது வீட்டில் புகை பிடிக்க  வீட்டில் நன்மை நடக்கும். வாரம் தடவை இது போல் செய்ய வேண்டும் .           
    
ஏழரை சனி பரிகாரம்

     ஏழரை சனி நடக்கும்போது வன்னிமர  விநாயகற்கு அர்சிமாவு எடுத்து விநாயகர் சுற்றி போட்டு 21  முறை சுற்றிவர  சனி பாதிப்பில் இருந்து   ஓர்  அளவு நிவர்த்தி ஆகும் .     
நாக பஞ்சமி 

     நாக பஞ்சமி அன்று  8  சிவா ஆலயம் சென்று சிவனை வழிபடல் மிகுந்த விஷேசம்.இது கார்த்திகை மாதம் வரும் பஞ்சமி நாக பஞ்சமி ஆகும் .    
   


Tuesday 14 February 2012

விஷங்கள்   இறங்கும்  மந்திரம் 

ஓம்  கருடா  ஓம் கருடா
ஓம் பட்சி  கருடா ஓம்  மட்சிமல்
லாரி கருடா சங்குகிரூக  சக்கா
ரம் கிருக ஆதிமூலம்  கிருக ஆமிசம்
காட்டினன் ஓடிவந்தான்  கருடன் 
உச்சான்ட  கொம்பில் ஏறினான் கருடன் 
விட்டது  நாகவாசம் விஷம் அங்குமில்லை 
அந்தி பொழுதில் குதியாநீன் அமிர்தம் 
கொண்டு முதி கொண்டேன்   மசி நசி


உரு  100008    ஏற்றி வேப்படலை  கொழயால் மந்திரத்தை சொல்லி  கொழயால்  அடித்தல்  விஷம் இறங்கும் .




   
வில்வ  மரத்தின்  மகிமை 

ஒரு  சிவன்  கோயில்  அடியல்   ஒரு வில்வ மரத்தினை   கொடுப்பதால்  சகலபாவங்கள்    தொலைந்து   அனைத்து  நலன்களும்     கிடைக்கும் . 

வில்வம்  வளர்பதினால்  லக்ஷம்  ஸ்வர்ணபூவிருக்கு  சமமாகும் . அஸ்வமேதை  யாகம்    செய்த  பலன்  கிட்டும் . ஆயிரம்      பேருக்கு  அன்னதானம்  செய்த பலன் கிடைக்கும்.
மைதுலாஅஷ்டமி    

கணவன்  மனைவி  கருத்து  வேறுபாடு  காரணமாக  பிரிவினை  இருக்கலாம். மைதுலாஅஷ்டமி அன்று  அம்பாளை  பூஜை  செய்து  வந்தால்  கணவன்  மனைவி   இடையே   உள்ள  விரோதம   மறைந்து  சேர்ந்து   வாழ்வார்கள் .




ரம்பா திதி 

அழகுக்கு  அழகான  வள்ளி  என்று  அபிராமி  என்னும்  பார்வதி  தேவி  தான்  ரம்பை  அவள்  திதி அன்று  பூஜை  செய்து  வழிபடவேண்டும் . கார்த்திகை  மாதம் அம்மாவசை  முடித்த  மூன்றாவது  நாள்  ரம்பதிதி  அன்று  பெண்கள்    ஒரு  நகை  வாங்கி    கௌரி  அம்மனை    நினைத்து  நகை போட்டுகொண்டால்  பெண்கள்   அழகாகவும்  நகை நிறைந்தும்  காணப்டுவார்கள்     என்பது  உண்மை .
   

ஆன்மீகத் துளிகள்

ஆன்மீகத் துளிகள் 




சித்தர்களின் பூஜை முறைகளும் பரிகாரங்களும் 
   
 கற்பூர தரிசனம்


  கற்பூரம் அக்கினி ரூபமாக இருக்கிறது. அக்கினி ரூபமான ஜோதி  -ஜோதி ரூபமான கண்ணின் அதிதேவதையான சூரியன் யிடம் இருந்து கலந்து ஒன்றாகி கண் மார்க்கமாக உட் செய்து அம்ருத ரூபமாக பிரம ஜோதியில் கலக்க வேண்டும் . அதுபோல கலந்து நான் என்ற நிலையை விட்டு பிரமமாக விளங்குவதை தான கற்பூரதீபத்தை  கண்ணில் ஒற்றி கொள்வதன் தத்துவம். பிரபஞ்சம் என்பது எண்ணம் ,மனம், அறிவு ,பூரணம் , அண்டம்,பேரண்டம் ,இறைவன் வழி அதுவே  பிரமம் , சிவம்  என்பதுஆகும்.
  
   
 

 
 
 
 

 
 
 
 


  
  
 
 
Seriale online